ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வேயானது அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனிமேல் பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார்.

நீங்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் எனில், தற்போது உங்களுக்கும் இலவசமாக உணவு கிடைக்கும். இந்திய ரயில்வேயில் பல முறை பயணம் மேற்கொள்பவர்கள் ரயிலுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ரயில் பலமுறை தாமதமாகிறது. அவ்வாறு ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே தரப்பிலிருந்து இலவச உணவு வசதியானது கிடைக்கும்.

அதாவது, சில சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வேயானது வழங்குகிறது. இவ்வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ஆகிய விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இச்செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.