ஐந்து முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரயில்களில் தனி படுக்கையோ, தனி இருக்கையோ எதுவாக இருந்தாலும் பாதி கட்டணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் முதல் இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது .அதன்படி குழந்தைகளுக்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்தது. தனி படுக்கை, தனி இருக்கை இல்லாமல் பெரியவர்களோடு ஒரே படுக்கையை குழந்தைகள் பகிர்ந்து கொண்டால் மட்டும் அவர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதனால் கிடைத்த வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுர் என்பவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே தகவல் சேவை மையம் பதில் அளித்துள்ளது. அதில், ரயில்களில் குழந்தைகள் பயண கட்டண விதிமுறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் கடந்த ஏழு வருடங்களில் 2800 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும், அதிகபட்சமாக 2022-23 நிதி ஆண்டு 560 கோடி கூடுதல் வருவாயும்,  குறைந்தபட்சமாக 2020-21 நிதியாண்டு 157 கோடி கூடுதல் வருவாயும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.