தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளதால், படத்திற்கான டிக்கெட்டை, டிக்கெட் நியூ, புக் மை ஷோ ஆப்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு சில தியேட்டர்களின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.