இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சமையல் எரி வாயு 200 வரை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை 400 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.