தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைந்துள்ளார். அதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய போது, பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி அருகில் நிற்க நினைப்பவர்கள் வரவேற்க வரத் தேவையில்லை. பிரதமரை வரவேற்க நீங்க வாங்க என யாரையும் போன் போட்டு அழைக்கவில்லை. மோடியை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் வரவேற்க வந்தால் போதும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.