இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தமிழர்களின் வைர கிரீடம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காலையில் கண்ணதாசன் பாடல் எழுதிய இடத்தில் மாலையில் அமர்ந்து வைரமுத்து பாடல் எழுதினார். நான் அன்று வைரமுத்து எட்ட முடியாத உயரத்திற்கு வருவார் என கணித்தேன். என்னுடைய கணிப்பு இன்றைக்கு உண்மையாகியுள்ளது. அவரை தமிழ் சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கிய தேவை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.