கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தமிழர்களின் வைர கிரீடம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காலையில் கண்ணதாசன் பாடல் எழுதிய இடத்தில் மாலையில் அமர்ந்து வைரமுத்து பாடல் எழுதினார். நான் அன்று வைரமுத்து எட்ட முடியாத உயரத்திற்கு வருவார் என கணித்தேன். என்னுடைய கணிப்பு இன்றைக்கு உண்மையாகியுள்ளது. அவரை தமிழ் சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கிய தேவை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.