எல்ஐசி 40 ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அதற்காக எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் ஒரு முறை முதலீடு செய்தால் மட்டும் போதும். ரூ.30 லட்சம் மதிப்பிலான வருடாந்திர தொகையை முதலீடு செய்தால் வாழ்நாள் ஓய்வூதியமாக மாதந்தோறும் 12500 ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்தால் செலுத்தப்பட்ட முதலீடு நாமினிக்கு வழங்கப்படும்.