திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தங்கி இருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் குமார் என்பவர் திடீரென ராஜேந்திரனிடம் தகராறு செய்து அவரை கம்பால் தாக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் ராஜேந்திரன் ஒரு டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தார்.

ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற முகேஷ் குமார் முதியவரை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகேஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.