தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் படித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பதும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தர்மனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.