மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பெண் ஒருவரிடம் ரூ.2.5 லட்சத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பணம் எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, தான் ஒரு யாசகர் என்றும், யாசகம் பெற்று 45 நாட்களில் அந்தத் தொகையை சம்பாதித்ததாகவும் கூறியுள்ளார்.

தான் திருடவில்லை என்றும், மற்றவர்களிடம் இருந்து யாசகம் பெற்று சம்பாதித்ததாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் யாசகம் பெற்று வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.