வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும் வாக்களித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக பலர் வாக்களித்திருந்தாலும், பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக 32% பேர் தெரிவித்துள்ளனர்.