இன்று ராமநாதபுரத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம்  நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நான் கேட்கிறேன், அதுவும் ராமநாதபுரத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். பிரதமர் மோடியை ராமநாதபுரத்தில் போட்டியிடுமாறு சிலர் அழைக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் சொன்ன வாக்குறுதிகளையாவது பிரதமர் மோடி நிறைவேற்றியிருக்கிறாரா? 2014இல் ராமநாதபுரத்தில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி என்னவானது? ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அறிவிப்பேன் என்று சொன்னார். அதை செய்தாரா மோடி? 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மோடி சுட்ட பல வடைகள். தேர்தல் முடிந்ததும் ஊசிப் போய்விட்டது என்றார்.