பெங்களூரு பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி தாலி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் யார் ஒருவருடைய தங்கத்தையவாது பறித்து இருக்கிறதா? போரின் போது தன்னுடைய தங்க நகைகளை நாட்டிற்கு கொடுத்தவர் எனது பாட்டி இந்திரா காந்தி.

இந்த நாட்டிற்காக தனது மாங்கல்யத்தை இழந்தவர் எனது தாய் சோனியா காந்தி என உருக்கமாக பேசினார். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக மோடி இவ்வாறு தரம் தாழ்ந்து பேசி வருவதாக பிரியங்கா விமர்சித்தார்.