திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா அல்லது அலுவல் ரீதியானதா என்பதை தெரிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

இம்மாதம் 20, 21 தேதிகளில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த பிரதமரின் பயணம் தனிப்பட்ட முறையிலானதாக இருந்தால் அவர் பயணித்த விமானம் ஹெலிகாப்டர் கார்களுக்கான செலவை யார் செய்தது என வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.