எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் ஒரு சதவீத சிறுபான்மையினரின் வாக்குகளை கூட வாங்க முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர்களில் ஒருவரான ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பாஜகவை அதிமுக சாதாரணமாக கருதுவதாகவும் தேர்தலுக்குப் பிறகு பாஜக அவர்கள் நினைப்பது போல் இல்லை என்பதை தெரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாஜகவுடன் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும். அரசியல் ரீதியாக அதிமுகவினர் பின்னாளில் மிகவும் வருத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்திலிருந்து ஒரு சதவீத சிறுபான்மையினரின் வாக்குகளை கூட பெற முடியாது. பசித்தோல் போர்த்திய புலி போல் போனால் நம்பி விட மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என ராம ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார்.