சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் முன்னிலையில், தமிழ் மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே பதிப்புரிமை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.
அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது”  தமிழ்நாடு அரசு சார்பில் மொழிப்பெயர்ப்பு ஊக்கத்தொகையாக (Translation Grand) 3 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.