கட்சியை பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக 146 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருதப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பி ஆர் எஸ் மற்றும் பிரதான கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகின்றது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி சாலையோர கடையில் மொறுமொறு என்று தோசை சுட்டு அசத்தினார். தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட அவர் திடீரென்று அங்குள்ள சாலையோர ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை நலம் விசாரித்தார். அப்போது ஒரு கிண்ணத்தில் தோசை மாவு எடுத்து அதை கல்லில் ஊற்றி எண்ணெய் மற்றும் மசாலா பொடி தூவி தோசையை திருப்பி போட்டு எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
TELANGANA POLITICAL BREAKING:#CommonManRaGa: When RaGa became Common man with commoners..#WATCH: Rahul visited a roadside canteen & tried his hand in making dosas.
Rahul Gandhi made a stop at the NAC bus stop in the middle of his journey to Jagityal as part of the Congress… pic.twitter.com/i4TsvgUNqo
— Gururaj Anjan (@Anjan94150697) October 20, 2023