வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ எட்டியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.