ராஜஸ்தானில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சர்ஜு தேவி சமீபத்தில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தையின் ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்களும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்களும் மொத்தம் 26 விரல்கள் இருந்தது. அதுமட்டுமின்றி, குழந்தை முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளது.

மேலும் குழந்தையை டோலகாத் தேவியின் அவதாரமாக குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால் குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களே கூடுதல் விரல்களுக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.