இளைஞர் ஒருவர் தன்னுடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து மனைவியின் உதவியுடன் சடலத்தை புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனோகர் ஷுக்லா என்ற இளைஞர் நைனா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நைனா அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதை அடுத்து அவரை கொடூரமாக கொலை செய்தார் மனோகர். இதனை தொடர்ந்து போலீசார் கணவன் மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.