இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாரத் என்ற பெயர் எங்கிருந்து வந்தது, சனாதன தர்மத்தில் இருந்து வந்ததா? இந்தியாவை சிந்து நாடாக மாற்ற முயற்சி செய்தால் 2047 ஆம் ஆண்டு இந்தியா பல நாடுகளாக பிரிந்து யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என மாறிவிடும் என்று அவர் எச்சரித்தார்.