மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அன்டனானரிவோவில் அமைந்துள்ள மைதானம் பரியா. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காண பார்வையாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் திடீரென மைதானத்தை கூட்ட நெரிசல் அதிகமாகி பார்வையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைதானத்தில் திடீர் கூட்ட நெரிசல்…. 12 பேர் உயிரிழப்பு…. மடகாஸ்கரில் சோகம்….!!
Related Posts
அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read moreவிண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read more