அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் மரிகா தாமஸ். இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மரிகா மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் ஆடை வெப்பத்தால் கருகி புகை வாசனை வந்துள்ளது.

இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மைக்ரோ ஓவனில் படுகாயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து மரிகா தாமஸை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து குழந்தையை ஓவனில் வைத்ததும் தெரியவந்துள்ளது.