தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்ப பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் கலந்தாய்வுகள் நடத்தப்படும். ஜூலை மாதம் இரண்டாவது வாரம் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.