12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12 தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன. அன்றைய தினம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதால் தமிழகம் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.