தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட நிலையில், 12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக CM ஸ்டாலின் சுமுக முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாளைய தினம் அமைச்சர்கள் தலைமையில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், சுமுகமாக பேசி, நல்ல முடிவு எடுக்கப்படும். எட்டாத முடிவுகளை எல்லாம், எட்டவைப்பார் CM. இப்பிரச்னையை அனைத்து தரப்பு ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர் சுமுகமாக முடித்து வைப்பார் என்றார்.