விழுப்புரம் பனிமலையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் தொலைதூர மின்சார விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வருகின்ற ஜூலை 3, 8, 10, 15 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக விழுப்புரத்தில் இருந்து தினமும் பகல் 1.40 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில் மேற்கண்ட தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.