![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/24-66487e7dbad47.jpg)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும்.
மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் மே 25ஆம் தேதி மாலை நிலவும் எனவும் இதனால் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு