ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்திற்காக அவர் கூறிய காரணம்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தான் முக ஒப்பனைக்காக பயன்படுத்தும் மேக்கப் கிட்-ஐ அந்த பெண்ணின் மாமியார் எடுத்து பயன்படுத்தியுள்ளார்.

அதனை தனது கணவரிடம் அந்த பெண் கூறியுள்ளார். அதுகுறித்து தனது தாயிடம் கேட்டு கண்டிக்காமல் தனது கணவர் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பெண் விவாகரத்து கேட்டுள்ளார். இந்த விவாகரத்து வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.