பள்ளியில் இருந்து திரும்பும் உங்களது குழந்தைகளை அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை, எந்த கேள்விக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை எனக்கூறி அவர்களை அடிக்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக மம்தா பானர்ஜியை அறையுங்கள். ஏனென்றால் அவர் கல்வி முறையை அழித்துவிட்டார் என்று வங்காள மொழியில் மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

அவரின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள திரிணாமுல் கட்சியினர், அவரின் இந்த பெண் விரோத பேச்சுக்கு பகிரங்ககமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.