குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பெண் அரசு ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தால், அவரது கணவருக்குப் பதிலாக தகுதியான குழந்தை அல்லது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் இதுவரை நடைமுறையில் உள்ள விதிகளின்படி, அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் யாராவது ஒருவர் இறந்தால், அந்த நபரின் மனைவி அல்லது கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.