குஜராத் மாநிலத்தில் வாகன போக்குவரத்திற்கு மத்தியில் சிங்கம் ஒன்று தெருகளில் நடந்து சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் சிங்கம் ஒன்று சாலையோரம் கூலாக நடந்து செல்லும் போது காரும் பைக்கும் கடந்து செல்வதை காண முடிகிறது. அமைதியாக நடந்து சென்ற சிங்கம் சுற்றியுள்ள மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்கவில்லை. இருந்தாலும் பரபரப்பான சாலையில் சிங்கம் ஒன்று சாதாரணமாக நடப்பதை கண்டு மக்கள் வீதியில் உறைந்தனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.