தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் மெண்டல் ஹாஸ்பிடல் சென்று தனது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.

கோவையில் பேசிய அவர், இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு பாஜக மாற்றும் என்று கமல் மேதாவித்தனமாக கூறியுள்ளார். அவர் சுய நினைவுடன் தான் பேசுகிறாரா? இல்லை திமுக தரும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக இப்படி கூவுகிறாரா? என்று தெரியவில்லை. அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.