சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், பைக், கார்களில் வருவோருக்கு பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன