கேரளா ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரளா அரசின் கோடைகால பம்பர் லாட்டரி முதல் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதற்கான குழுக்களில் 308797 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த லாட்டரி கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நசீர் வாங்கியது தெரியவந்துள்ளது. குழுக்கள் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் அவர் அந்த லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.