100 நாள் வேலை திட்ட ஊதியம், மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைந்தால் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ஏழு ரூபாய் உயர்த்தியுள்ளார். இந்த பெரிய நிதியை வைத்து என்ன செய்வீர்கள் என அவர் கேட்டாலும் கேட்கக் கூடும். INDIA கூட்டணி அரசு அமைத்த முதல் நாளே அந்த சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளார்.