கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், ரசாயனங்களைக் கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் அலுவலர், இத்தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.