மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 1126 திரையரங்குகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது என்பதற்காக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்காக தனியார் நிறுவனங்களுக்கும் முழு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.