கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஈஷாவில் அமைந்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக தியானலிங்கம் & ஆதியோகி வளாகங்கள் இன்று ஒருநாள் மூடப்படுமென ஈஷா யோகா மையம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிக்காக கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மே 30ம் தேதி ஒரு நாள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று மூடப்படும் ஈஷாவிற்கு பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.