முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இரு மாநில அரசுகளும் சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் கேரளா சார்பில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதால் அதனை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. சர்வே செய்தால் யாருடைய இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிந்துவிடும் என கூறிய நீதிமன்றம் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் சர்வே செய்ய உத்தரவிட்டுள்ளது.