வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக அளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளதால், பல்வேறு திட்டங்களுக்கான நிதியை வங்கி கணக்கில் செலுத்தும் நிலையில், இதை செலுத்துவதில் சிக்கல் இருக்காது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.