தமிழகத்தில் வெள்ள நிவாரணம் 6000 ரூபாயை மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் சென்னையில் நீண்ட நாட்களாக தங்கி இருப்போம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் வெளியாகி உள்ளது.