ராமநாதபுரத்தில் இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதனையடுத்து நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 50க்கு மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். 3000 போலீசார் பாதுகாப்பு .பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வருகையையொட்டி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.