உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியின் மண்டல ரயில்வே மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சிக்கரமான மற்றும் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்தும் சம்பவம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்துள்ளது.
அன்றைய தினம், இரண்டு குதிரைகள் மருத்துவமனை கட்டிடத்திற்குள் அசாதாரணமாக நுழைந்து, நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சியை நோயாளிகளின் உறவினர்கள் ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், குதிரைகள் சுதந்திரமாக வார்டுகளுக்குள் நுழைந்து அலைந்து திரிந்தபோது, பாதுகாப்பு பணியாளர்கள் எவரும் அவற்றை வெளியே அனுப்ப முயற்சிக்காததையும், பல கதவுகள் மூடப்பட்டிருப்பதையும் காணலாம். குதிரைகள் கதிரியக்கவியல் பிரிவு வழியாக சென்று, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் (CMS) அலுவலகம் வரை சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடம் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அச்சத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ “X” பக்கத்தில், “முன்பு சாலைகள் மட்டுமே விலங்குகளுக்கென இருந்தன. இப்போது மருத்துவமனைகளும் விலங்குகளுக்கென விட்டுவைக்கப்பட்டுள்ளன. ஜான்சி ரயில்வே மருத்துவமனையின் வீடியோ, பாஜகவின் வளர்ச்சி மாதிரி என்பது மிருகக்காட்சிசாலை மாதிரியானது என்பதை சுட்டிக்காட்டுகிறது” எனக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியும் தனது “X” பதிவில், “முன்னதாக நாய்கள், பூனைகள், பாம்புகள், காளைகள், எலிகள், குரங்குகள் ஆகியவை மருத்துவமனைகளில் பிரச்சனை ஏற்படுத்தின. இப்போது குதிரைகளும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நிலை வந்துள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் உ.பி. முழுவதும் காட்டு ஆட்சி நிலவுகிறது” எனக் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
योगी राज में पहले सिर्फ सड़कें ही जानवरों के हवाले थीं, लेकिन अब अस्पतालों में भी यही हाल है।
वीडियो झांसी के मंडल रेलवे अस्पताल का है जहां 2 घोड़े बड़े आराम से चहलकदमी करते दिखाई दे रहे हैं।
हालात ऐसे हो गए कि डॉक्टरों और स्टाफ को खुद को बचाने के लिए वार्ड के अंदर बंद करना… pic.twitter.com/OhxklTYVLP
— UP Congress (@INCUttarPradesh) August 31, 2025
