பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.  அந்தவகையில் ஏரி பகுதி ஒன்றில் நீர் அருந்துவதற்குகூட்டமாக  வந்த எருமையில் ஒன்று முதலையின் வாயில் சிக்கி மீண்ட காட்சி வைரலாகி வருகின்றது.

இங்கு காட்டு எருமைகள் ஆற்றைக் கடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக  முதலையின் வாயில் மாட்டிக்கொள்கின்றது. ஆனால் மற்ற எருமை மாடுகள் பயத்தில் பின்னோக்கி செல்கின்றது. கடைசியில் தனது விடாமுயற்சியினால் அந்த முதலையிடமிருந்து நொடிப்பொழுதில் சாமர்த்தியமாக தப்பித்துள்ளது .