“முதலமைச்சர் கோப்பை 2023” மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவை விளையாட்டு உள்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 1 முதல் ஜுலை 25 வரை இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க உள்ள 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீராங்கனைகள், நடுவர்கள், அலுவலர்கள், அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு தனியார் விடுதிகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவைகளில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நாட்களிலும் மூன்று வேலை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.