மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரம்-எர்ணாகுளம் இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். தாம்பரத்தில் இருந்து நாளை மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 27-ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் எனக் கூறியுள்ளது