முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை தேடி அதில் பலன் கிடைக்காமல் மன சோர்வோடு சிலர் இருப்பார்கள். தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தன்னுடைய சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து கிடைக்காதது தான் .இதனால் முடிக்கு  தேவையான ஊட்டச்சத்துக்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆயுர்வேத பானத்தை தயாரிக்கலாம். இஞ்சி இரண்டு நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிக்கொண்டு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கறிவேப்பிலையில் முடியின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் தேவையான ஆண்டி-ஆக்சிடன்டுகள் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு தூண்டுதல் பண்புகள் உள்ளன. நெல்லிக்காய் விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை  குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் இளநரையை கட்டுப்படுத்தும்.