தமிழ்நாட்டில் நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு -105, வேலூர், திருச்சியில் தலா 104, திருத்தணி, திருப்பத்தூர், மதுரை நகரில் தலா 103, பாளையங்கோட்டை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த வெயிலின் காரணமாக பிற்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை சிறுவர்கள், கர்ப்பிணிகள். முதியோர் வீட்டை வெளியேற வேண்டாம் என அரசின் சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.