திருச்சி பணி மனையில் மேம்பாட்டு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவை ஜூலை 23ஆம் தேதி அதாவது இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் திருச்சி மற்றும் மதுரை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் இன்று பொன்மலையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் இன்று அரக்கோணம் வழியாக செல்வதற்கு பதில் திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, திருத்தணி மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் இன்று திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக செல்வதற்கு பதில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி மற்றும் விருதுநகர் வழியாக செல்லும். மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தேஜஸ் நிறைவறையில் இன்று பிற்பகல் 4.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.